சினிமா
நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் படத்திற்காக ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் கர்ணன் படத்தின் பேனரை வைத்து இருக்கிறார்கள். இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடுக்கடலில் பேனர்!
— Sathish Maalaimalar (@SatthiEshwar) April 8, 2021
கர்ணண் படத்துக்காக தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.#KarnanFromTomorrow#Karnan#Dhanush@dhanushkrajapic.twitter.com/LklPqWyS4C