சினிமா
பட விழாவில் கண்கலங்கிய சென்ட்ராயன்
தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்த சென்ட்ராயன் பட விழாவில் கண்கலங்கி பேசி இருக்கிறார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ‘ஆடுகளம்’, ‘மூடர் கூடம்’, ‘ரௌத்திரம்’ என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்து குறித்து சென்ட்ராயன் கூறும்போது, ‘நான் தியேட்டரில் கைத்தட்டல் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. பொல்லாதவன், ஆடுகளம் நல்ல படங்களில் நடித்தேன். அது ரொம்ப பெரிய போதை. அந்த படங்களில் நிறைய கைத்தட்டல் வாங்கிட்டு, பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் தான் இருந்தேன். அது ரொம்ப பெரிய வலி. திரும்பி ஊருக்கே போய் விடலாம் என்று நினைத்தேன்’ என்று கூறி கண்கலங்கினார்.
மேலும் தற்போது சுல்தான் வெளியாகி இருக்கிறது. என் கதாபாத்திரத்தை நிறைய மக்கள் ரசித்து கைத்தட்டினார்கள். நான் வேலை செய்த தியேட்டரில் என் படம் ஓடுகிறது என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.