சினிமா
வாக்களித்த நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.... ஜனநாயக கடமையாற்றிய டாப் ஹீரோயின்கள்

Published On 2021-04-06 13:34 GMT   |   Update On 2021-04-06 13:34 GMT
ஜனநாயக கடமையாற்றிய நடிகைகள் சிலரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சட்டசபை தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதேபோல் நடிகைகள் சிலரின் புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதன் தொகுப்பை காணலாம்.

எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து அசத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், அவர் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.



நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரும் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஓட்டுப் போட்ட பிறகு ‘மை’ விரலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ஒரு விரல் புரட்சி செஞ்சிட்டேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் டார்லிங், மரகத நாணயம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி, சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார்.



பாடகி, நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா, இவர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்களித்துள்ளார். வாக்களித்த பின் ‘மை’ விரலுடன் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகையும் முன்னாள் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஜனனியும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ‘நான் ஓட்டுப் போட்டுட்டேன், நீங்க’ என்று டுவிட் போட்டுள்ள அவர், புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.



நடிகையும், நடிகர் பிரசன்னாவின் மனைவியுமான சினேகாவும் தேர்தலில் வாக்களித்துள்ளார். சென்னை தி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்ட அவர், ‘மை’யிடப்பட்ட விரலை காண்பித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் இன்று தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இவர் தற்போது சூர்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இன்று தனது வாக்கினை அப்பா அருண் பாண்டியன் மற்றும் அம்மாவுடன் இணைந்து பதிவிட்டுள்ளார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.
Tags:    

Similar News