சினிமா
கங்கனா ரனாவத்

பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர் - கங்கனா ரனாவத்

Published On 2021-04-04 12:42 GMT   |   Update On 2021-04-04 12:42 GMT
தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், பெரிய ஹீரோக்கள் பற்றி சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது தலைவி படம் குறித்து பதிவிட்டுள்ள கங்கனா “என்னைத் திரைத்துறையிலிருந்து வெளியேற்ற எல்லாவற்றையும் செய்தார்கள். கும்பல் சேர்த்தார்கள், என்னைத் துன்புறுத்தினார்கள். அந்த பாலிவுட் ஆளுமைகளான கரண் ஜோஹர் மற்றும் ஆதியா சோப்ரா ஆகியோர் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.



பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர். ஆனால் கங்கனா ரனாவத் தனது 100 கோடி பட்ஜெட் படத்துடன் பாலிவுட் வரலாற்றைக் காப்பாற்றுவதற்காக வருகிறார். வெளியிலிருந்து வந்த பெண் பாலிவுட்டின் இரட்சகராக மாறி அதைக் காப்பாற்றினார் என்று பொன்னெழுத்துகளில் பொறியுங்கள். வாழ்க்கை நம்மை பல வழிகளில் ஆச்சரியப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
Tags:    

Similar News