சினிமா
ரஜினி, தனுஷ்

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்

Published On 2021-04-03 06:53 GMT   |   Update On 2021-04-03 06:53 GMT
நடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.
இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.



இந்நிலையில், 67-வது தேசிய விருது வழங்கும் விழா, வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெற உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினர் மற்றுமின்றி, ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News