சினிமா
கங்கனா ரணாவத்

நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தை - கங்கனா ரணாவத்

Published On 2021-03-30 07:36 GMT   |   Update On 2021-03-30 11:14 GMT
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது பெற்றோர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தி பட உலகில் போதை மருந்து புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசை சாடினார். இதனால் அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. 

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பெற்றோரின் ஆண் குழந்தை, நான் பிறந்தபோது இறந்துபோனதால் நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தையாகவே வளர்ந்தேன். என்மீது அவர்கள் வெறுப்பு காட்டியே வளர்த்தார்கள். ஆனால் இப்போது என்னை சிறந்த நடிகை என்று பாராட்டுகிறார்கள். 



நான் பணம் சம்பாதிக்கவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிக்க வரவில்லை. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்னால்தான் நடிக்க முடியும் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்புகின்றனர். அது பெருமையாக உள்ளது. குழந்தையாக இருந்தபோது நான் வெறுக்கப்படும் நிலையில் இருந்தாலும் இப்போது உலகம் போற்றும் நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.
Tags:    

Similar News