சினிமா
அனுஷ்கா

நடிகர் மரணம் - அனுஷ்கா உருக்கமான பதிவு

Published On 2021-03-29 21:12 IST   |   Update On 2021-03-29 21:12:00 IST
பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேதம். தமிழில் இந்தப்படம் வானம் என்கிற பெயரில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு படத்திலும் ஒரே கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். 

வேதம் படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நாகையா அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். மேலும் அனுஷ்கா நடித்த பாகமதி உள்ளிட்ட படங்களிலும் நாகையா நடித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேதம் நாகையா சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.



தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பகிர்ந்துள்ளார்.

Similar News