சினிமா
மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் நடந்த விஷேசம்

Published On 2021-02-27 18:39 IST   |   Update On 2021-02-27 18:39:00 IST
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் விஷேசம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனுஷின் கர்ணன் படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் விஷேசம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மாரி செல்வராஜின் மனைவியான திவ்யாவிற்கு வளைக்காப்பு நிகழ்ந்துள்ளது.



ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதும், தற்போது இரண்டாவது குழந்தையை இந்த தம்பதியினர் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களது வளைக்காப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Similar News