சினிமா
ஜிவி பிரகாஷ்

கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - ஜி.வி.பிரகாஷ்

Published On 2021-02-06 11:38 IST   |   Update On 2021-02-06 11:38:00 IST
கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் என்று முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்துக்கு வெளிநாட்டு நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவில், 



“மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் ஜனநாயகம்தான். அவர்கள் ஏர்முனை கடவுள் என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்'' என்று கூறியுள்ளார்.

Similar News