சினிமா
பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்?
பாகுபலி நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் பிரம்மாண்ட படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் சுருதிஹாசன் புகழ் பெற்ற நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்தக் கூட்டணி உறுதியானால் பிரபாஸுடன் சுருதிஹாசன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.