சினிமா
விஷால், விஜய்

‘மாஸ்டர்’ கொடுத்த தைரியத்தால் அதிரடி முடிவெடுத்த விஷால்

Published On 2021-01-24 06:15 GMT   |   Update On 2021-01-24 06:15 GMT
பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீசான மாஸ்டர் படம் கொடுத்த தைரியத்தால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை ஓடிடி-யை தவிர்த்து திரையரங்குகளில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.



அந்த வகையில், நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், அதனை கைவிட்டு தற்போது திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News