சினிமா
கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்திக் கொண்ட 2 நடிகைகள்

Published On 2020-09-21 07:00 GMT   |   Update On 2020-09-21 07:00 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக 2 நடிகைகள் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்களாம்.
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது. கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போது, இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.



அதேபோல் அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி வருவதாகவும், இதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் சின்னத்திரை நடிகை சிவானியும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதி என தகவல்கள் வெளிவந்துள்ளன.
Tags:    

Similar News