சினிமா
அமலாபால்

அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது - அமலாபால்

Published On 2020-01-30 13:15 GMT   |   Update On 2020-01-30 13:15 GMT
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், பொதுவாகவே நடித்தவர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் எப்போதும் மிகப்பெரிய அளவில் அவர்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள். ஆனால் அதையெல்லாம் போலி என விமர்சனம் செய்துள்ளார் நடிகை அமலா பால். 



அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது, ‘விருது விழாக்கள் என்றாலே போலி. மற்றவர்கள் நம்மை பற்றி பேசுவதும் கூட போலியாகவே தெரியும்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News