சினிமா
ராஜமவுலி

15 வருடத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகை

Published On 2020-01-30 18:08 IST   |   Update On 2020-01-30 18:08:00 IST
ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டமான படத்தில் 15 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் புதிய சேர்க்கையாக நடிகை ஸ்ரேயா சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். 



படத்தில் வில்லனாக நடிக்கும் அஜய் தேவகன் ஜோடியாக நடிக்க ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் 2005ல் வெளிவந்த 'சத்ரபதி' என்ற படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.

Similar News