சினிமா
நாகேஷ்வர் ராவ்

தமிழ் சினிமா இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார்

Published On 2020-01-20 07:21 GMT   |   Update On 2020-01-20 07:21 GMT
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த நாகேஷ்வர்ராவ் காலமானார்.
ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் நாகேஷ்வர்ராவ் என்கிற ஆதீஷ். உடல்நலக்குறைவால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார். 

அவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா, இசையமைப்பாளர் கண்மணிராஜா, இயக்குநர் ஆனந்த் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். 
Tags:    

Similar News