சினிமா
சிருஷ்டி டாங்கே

படப்பிடிப்பில் பொங்கல் கொண்டாடிய சிருஷ்டி டாங்கே

Published On 2020-01-14 13:41 IST   |   Update On 2020-01-14 13:41:00 IST
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே, கட்டில் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடியுள்ளார்.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.  படப்பிடிப்பின் போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 



"கட்டில்" படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு பொங்கல் கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

Similar News