சினிமா
டாப்சி பட இயக்குனருக்காக சமந்தா எடுக்கும் புதிய முயற்சி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, டாப்சி பட இயக்குனருக்காக புதிய முயற்சி ஒன்றை எடுக்க இருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்குத் திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அவ்வப்போது நடித்துவிட்டு செல்வார். இந்த வருடம் சமந்தா நடித்து தமிழில் வெளிவந்த ஒரே படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. அதன்பின் வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
இதனிடையே, டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், சமந்தாவிடம் கதை ஒன்றை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாராம். படத்தின் கதையால் கவரப்பட்ட சமந்தா, தெலுங்கு, தமிழில் அவரே படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் மட்டும் வேறு ஒரு நிறுவனம் இணை தயாரிப்பு செய்யும் எனத் தெரிகிறது.