சினிமா
வைரமுத்து, சின்மயி

வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு

Published On 2019-12-27 07:47 GMT   |   Update On 2019-12-27 07:47 GMT
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார். வைரமுத்து மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம். உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார். 

“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.
Tags:    

Similar News