சினிமா
அர்ஜூன்

அவரது படங்களை பார்த்து தீவிர ரசிகன் ஆனேன் - அர்ஜூன்

Published On 2019-12-26 11:00 GMT   |   Update On 2019-12-26 10:49 GMT
தமிழ், கன்னடம், தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜூன், அவரது படங்களை பார்த்து தீவிர ரசிகன் ஆனேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 3 மொழிகளிலும் தனக்கு என்று தனி மார்க்கெட்டுடன் அர்ஜூன் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ஹீரோ படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் நடிக்க வந்த புதிதில் நடிக்க தெரியாமல் சிரமப்பட்டேன். 

மிக இளம் வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் இந்த சிரமம் ஏற்பட்டது. அதனாலேயே என்னவோ நடிப்பை விட ஆக்‌ஷன் அதிகம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தேன். பின்னர் சிவாஜி, நாகேஷ் படங்களை பார்த்து அவர்களிடம் இருந்துதான் நடிப்பை கற்றுக்கொண்டேன். 



ஒரே மாதிரியான படங்களில் நடித்ததால் ஒரு சமயம் மார்க்கெட்டை இழந்தேன். அதன் பிறகு தான் இயக்கம், தயாரிப்பு எனவும் கவனம் செலுத்த தொடங்கினேன். அதன் பின் என் கேரியரில் ஏற்றம் வந்தது. இப்போது சினிமாவை நேசித்து ரசித்து நடிக்கிறேன். நான் புருஸ்லீயின் படங்களை பார்த்து அவரது தீவிர ரசிகன் ஆனேன். அதன் பின்னர் தான் ஆக்‌ஷன் படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News