சினிமா
ஒருவரை காதலித்து பிரிந்துவிட்டேன் - பிரியா வாரியர்
கண் சிமிட்டல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், ஒருவரை காதலித்து பிரிந்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஒரே ஒரு கண் சிமிட்டல் வீடியோவால் பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த வளர்ச்சியை எதிர்பார்த்தீர்களா?
இல்லவே இல்லை. நான் ஒரே இரவில் பிரபலமானதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்படி அது நடந்தது என்றும் புரியவில்லை. அந்த 30 நொடி காட்சி வெளியானபோது நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்துவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை அந்த வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றதை நம்ப முடியவில்லை. சமூகவலைதளங்களில் என்னை பின் தொடர்ந்தவர்கள் ஒரே நாளில் லட்சக்கணக்கை தாண்டினார்கள்.
இணையத்தில் கிண்டல்கள் அதிகரிக்கிறதே?
அதற்கு முன்பு எனக்கு தோன்றியதை எல்லாம் பதிவிட்டு வந்தேன். ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் கவனமாக பதிவிடுகிறேன். இருந்தாலும் என்னை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து மீம் வெளியிடுகிறார்கள். நான் அதை கவனிப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
காதல் அனுபவம்?
நான் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் வந்து காதலை சொன்னான். நானும் அவனை காதலித்தேன். அது ஒரு இன கவர்ச்சி என்பதை பின்னர் இருவருமே புரிந்து கொண்டோம். அதன்பிறகு இரண்டு பேரும் பேசி பிரிந்து விட்டோம். இப்போது படிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
பிடித்த நடிகர் யார்?
தமிழில் எனக்கு பிடித்த நடிகர், விஜய் சேதுபதி. மலையாளத்தில், மோகன்லாலை பிடிக்கும்.