சினிமா
ஸ்ரேயா

ஒரு பாடலுக்கு ஆடுவது குறித்து ஸ்ரேயா விளக்கம்

Published On 2019-12-24 10:15 GMT   |   Update On 2019-12-24 10:15 GMT
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க, ரஷ்யாவில் இருந்து மும்பை வந்துள்ள ஸ்ரேயா, 'எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது, எனது கணவர் வீட்டில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார்.



என் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிம்பிளானது. அதை மறைக்க தேவையில்லை. பல்வேறு நாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தாலும் மும்பைக்கு வந்துவிடுகிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. இந்தியாவை விட்டு விட எனக்கு விருப்பமில்லை. இப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துவருகிறேன். இந்தியில், நயா நயா லவ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இதில் அக்‌ஷய் கண்ணா, பிரியங்கா சர்மா நடிக்கின்றனர். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News