சினிமா
தர்பார் படத்தில் ரஜினி

டிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்

Published On 2019-11-15 10:35 GMT   |   Update On 2019-11-15 10:35 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படக்குழுவினர் டிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்க இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். 

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்களான கமல், மகேஷ்பாபு, சல்மான் கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர். 



இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News