சினிமா
சமுத்திரகனி

சமுத்திரகனிக்கு குவியும் வில்லன் வேடங்கள்

Published On 2019-11-13 16:25 GMT   |   Update On 2019-11-13 16:25 GMT
பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனிக்கு, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்துள்ளதாம்.
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். 

இந்த படத்தில் ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ரவி தேஜா நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 



இதனை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இதில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாகவும், சமுத்திரகனி அவரை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதி மற்றும் தாதாவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடித்தார். அதனை சமுத்திரகனி இயக்கினார்.
Tags:    

Similar News