சினிமா
சென்னையில் தலைவி படப்பிடிப்பு தொடக்கம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக தலைவி படத்திற்காக கங்கனா ரணாவத் தீவிர பயிற்சி எடுத்து வந்தார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி, பரத நாட்டிய பயிற்சியிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், தலைவி படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைத்துள்ளார். இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது.