சினிமா
ராஷ்மிகா

நடிகையாக இருப்பது எளிது அல்ல - ராஷ்மிகா

Published On 2019-11-09 09:40 GMT   |   Update On 2019-11-09 09:40 GMT
தெலுங்கில் பிரபலமாகி தற்போது தமிழில் நடித்து வரும் ராஷ்மிகா, ஒரு நடிகையாக இருப்பது எளிதல்ல என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார். தனது சிறுவயது புகைப்படங்களை வைத்து மீம் தயார் செய்தவர்களை கடுமையாகச் சாடியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. 

இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, ’இதை செய்வதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. எங்களை தான் எளிதில் இலக்காக்க முடியும் என்பதாலா? பிரபலம் என்பதாலேயே இரக்கமின்றி எங்களை இலக்காக்க முடியாது. பலரும் மோசமான கருத்துகளை, கிண்டல்களை நிராகரித்துவிடுங்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். நானும் செய்கிறேன்.



எங்கள் வேலையை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எங்கள் குடும்பம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எந்த நடிகரும் இந்த மோசமான விஷயத்துக்கு உரியவர் அல்ல. நடிகராக இருப்பது எளிதல்ல. 

ஒவ்வொரு தொழிலுக்கும் நாம் அதிக மரியாதை தர வேண்டும். முதலில் சக மனிதரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன். யார் இதைச் செய்திருந்தாலும் அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் என்னை காயப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு அந்த திறன் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து நடக்கப்போகும் விஷயங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை ராஷ்மிகா மந்தனா இந்த அளவுக்கு கடுமையாக பேசியதில்லை என்பதால், இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News