சினிமா
துருவ், விக்ரம்

நடிகன் என்பதையே மறந்துவிட்டேன் - விக்ரம்

Published On 2019-11-07 19:51 IST   |   Update On 2019-11-07 19:51:00 IST
'ஆதித்ய வர்மா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகன் என்பதையே மறந்துவிட்டதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
'ஆதித்ய வர்மா' படத்தின் மலையாள பதிப்புக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பிரியா ஆனந்த் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விக்ரம் பேசும்போது, '' 'ஆதித்ய வர்மா' எனக்கு படம் தயாரிக்கும், இயக்கும் அனுபவத்தை தந்தது. 

சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் நான் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன். துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்துவிட்டு முகேஷ்தான் எங்களை அணுகினார். துருவ் வயதில் சிறியவர் என்பதால் என் மனைவிதான் சற்று யோசித்தார். ஆனால் படத்தை பார்த்த பின் அவர் நடிகனாக ஆரம்பிக்க இதுவே சரியான படம் என்று நினைத்தேன். 



படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனால் தன் மகன் பள்ளிக்கூடப் போட்டியில் மேடையேறும்போது ஒரு தந்தைக்கு எப்படிப் படபடப்பாக இருக்குமோ அப்படி எனக்கு இருக்கிறது'' என்று விக்ரம் பேசினார். 'ஆதித்ய வர்மா' படத்திற்கு தணிக்கை குழு ‘A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.

Similar News