சினிமா
நடிகர் சங்கம் லோகோ

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை

Published On 2019-11-07 12:03 GMT   |   Update On 2019-11-07 12:03 GMT
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்து விட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பதிவுத்துறை, “சங்கம் செயல்படவில்லை என்று அறிகிறோம். நாங்கள் ஏன் தனி அதிகாரி மூலமாக நிர்வகிக்கக் கூடாது” என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இது நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வணிக வரித்துறை முதன்மை செயலாளருக்கும், சங்கங்களின் பதிவாளருக்கும் விளக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்கள். அந்த கடிதத்தில் சங்க நிர்வாகம் சிறப்பாகவே செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தனர்.



இந்த நிலையில், இன்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் கே.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் சங்கங்களுக்கான பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் சேகர் என்ற தனி அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் நடிகர் சங்கமும் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
Tags:    

Similar News