சினிமா
பிரியா பவானி சங்கர்

ஆக்‌ஷன் ஹீரோயினாக களமிறங்கும் பிரியா பவானி சங்கர்

Published On 2019-11-07 10:04 GMT   |   Update On 2019-11-07 10:04 GMT
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் படமும் செம ஹிட் அடித்தது. இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளாராம். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.



இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2, எஸ்.ஜெ.சூர்யாவின் பொம்மை என பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.
Tags:    

Similar News