சினிமா
ஸ்வாரா பாஸ்கர்

ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை

Published On 2019-11-07 02:23 GMT   |   Update On 2019-11-07 02:23 GMT
4 வயது குழந்தை தன்னை ஆண்டி என அழைத்ததால் அவனை மோசமான வார்த்தையால் திட்டியதாக நடிகை ஸ்வாரா பாஸ்கர் கூறியுள்ளார்.
சோன் ஆப் அபிஷின் விவாத நிகழ்ச்சியில் நான்கு வயது குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நடிகை ஸ்வாரா பாஸ்கர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, 

சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிய ஒரு வீடியோ, திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளை ஸ்வாரா பயன்படுத்தி உள்ளார். தன்னை "ஆண்டி" என்று அழைக்கும் குழந்தை தன்னை கோபப்படுத்தியது என்று கூறினார்.

வீடியோவில் குழந்தையை இந்தியில் இரண்டு கடும் சொற்களை கூறி திட்டி உள்ளார். ஸ்வாராவைப் பொறுத்தவரை, அவர் குழந்தையின் முன்னால் வார்த்தைகளைச் சொல்லவில்லை, என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.



இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகையின் செயல் "வெட்கக்கேடான" மற்றும் "பரிதாபகரமானது" என்று கூறியுள்ளனர். #Swara_aunty மற்றும் #SwaraAunty என்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாகி இருக்கிறார்கள்.

ஸ்வாரா பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் புகார் அளித்ததாக சர்வதேச வர்த்தக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News