சினிமா
ஸ்ரீபிரியங்கா

அவர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் - ஸ்ரீபிரியங்கா

Published On 2019-11-06 09:19 GMT   |   Update On 2019-11-06 09:19 GMT
மிக மிக அவசரம் படத்தில் பெண் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, அவர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியிருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மிக மிக அவசரம் படம், ஒரு பெண் காவலரின் வலியை சொல்லும் படம். பவானி பாலத்தில் 22 நாட்கள் கடும் வெயிலில் நின்று நடித்தேன். படத்தை பார்த்துவிட்டு பெண் காவலர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். நான் சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 



ஆனால், நான் நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை. காரணம், நான் தமிழ் பெண். தமிழ் பேசத் தெரிந்த, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை’ என்றார்.
Tags:    

Similar News