சினிமா
இஷா கோபிகர்

முன்னணி நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார்- நடிகை இஷா கோபிகர் குற்றச்சாட்டு

Published On 2019-11-05 16:23 GMT   |   Update On 2019-11-05 16:23 GMT
முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை இஷா கோபிகர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, ஜோடி, என் சுவாச காற்றே, நரசிம்மா, காதல் கவிதை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இஷா கோபிகர். தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பிசியாக நடித்து வந்த இஷா தன்னுடைய திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார். இப்போது மீண்டும் திரைத்துறையில் ரீஎண்ட்ரி தருவதற்கு வந்திருக்கிறார்.

இஷாவின் இந்த ரீ எண்ட்ரி செய்தி பல்வேறு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய இஷா திரைத்துறையில் தான் சந்தித்த பல சவால்களையும் கஷ்டங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார். இஷா கோபிகர் தான் நடித்துக் கொண்டிருந்த போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருக்கிறார். அதனை தான் மறுத்ததால் பல பட வாய்ப்புகளையும் இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.



மேலும் அதனை பற்றி விரிவாக பேசியவர், சூப்பர்ஸ்டாருக்கு இணையாக இருக்கும் நடிகர் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் இஷாவை அணுகியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடன் அட்ஜஸ்ட்மென்டில் இருந்தால் ஏராளமான படம் குவியும் எனவும் இஷாவிடம் கூறினாராம் அந்த தயாரிப்பாளர். ஆனால் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத இஷா தன்னிடம் தவறாக அணுகியதாக கூறப்படும் தயாரிப்பாளரை போன் செய்து கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் மீது நடிகைகள் மீடூ என்ற இயக்கம் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் பற்றியும் கூறிவந்தனர். இந்த பிரச்சினை தற்போது அடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் இஷா இவ்வாறாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இஷாவை படுக்கைக்கு அழைத்த அந்த முன்னணி நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News