சினிமா
விஜய்

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2019-10-29 06:35 GMT   |   Update On 2019-10-29 06:35 GMT
பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒருவர் விடுத்துள்ளார்.
விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர். நீலாங்கரை உள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.



ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி தொடங்கியது. அப்போது போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News