சினிமா
கைதி படத்தில் கார்த்தி

லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது - கார்த்தி

Published On 2019-10-28 09:00 GMT   |   Update On 2019-10-29 09:34 GMT
கார்த்தி நடிப்பில் தற்போது கைதி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில், ‘கைதி படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மீகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார். நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்த விதமாகக் கூட இருக்கலாம். 



என் அப்பா திரையரங்கில் 'கைதி' படத்தை பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் சென்டிமென்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

நேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ('கைதி 2') 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார்’ என்றார்.
Tags:    

Similar News