சினிமா
ராசி கன்னா

2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்? - ராசி கன்னா

Published On 2019-10-25 08:52 GMT   |   Update On 2019-10-25 08:52 GMT
2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை ராசி கன்னா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜும் நடிக்கிறார். தொடர்ந்து 2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது குறித்தும் விஜய் படத்தில் நடிக்க இருப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் ராசி கன்னா கூறியிருப்பதாவது:- ’தெலுங்கில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’கூட அப்படிப்பட்ட படம்தான். 



ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்குன்னு மட்டும்தான் பார்ப்பேனே தவிர, எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு யோசிக்க மாட்டேன். ‘சங்கத்தமிழன்’ படத்தில் கமாலினி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் படத்துல நடிக்கணும்ங்கிறது என் கனவு. கண்டிப்பா அது நடக்கும்னு நம்புறேன். அதுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News