சினிமா
சிவகார்த்திகேயன்

தோல்விக்கு பின் வெற்றி- சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

Published On 2019-10-24 02:05 GMT   |   Update On 2019-10-24 02:05 GMT
தோல்வி படத்துக்கு பின் தான் நடித்த படம் வெற்றியடைந்துள்ளதால், நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். பாண்டிராஜ் இயக்கினார். இதற்கு முன் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். 

நம்ம வீட்டு பிள்ளையை வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அடுத்து விஷாலின் இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகிறது. 



இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதில் நடிக்கும் சிவகார்த்திகேயன் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.
Tags:    

Similar News