சினிமா
விஜய் சேதுபதி

அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் - விஜய் சேதுபதி

Published On 2019-10-23 21:21 IST   |   Update On 2019-10-23 21:21:00 IST
அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் என்று கூறியிருக்கிறார்.
பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அல்டி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், ராதாரவி, ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.



இதில் விஜய்சேதுபதி பேசும்போது, ‘மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமிக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் இசை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. படம் பெயர் அல்டி என்றார்கள். அப்படி என்றால் என்ன என்று கேட்டேன். அல்டிமேட்டுக்கு சார்ட்பார்ம் என்று சொன்னார்கள். நன்றாக இருக்கிறது.



எனக்கு மயில்சாமி அண்ணன் மீது மிகப்பெரிய அன்பும், மரியாதையும் உண்டு. அவருடைய பேச்சும், நடிப்பும் ரொம்ப பிடிக்கும். மயில்சாமி ஒரு சீன்ல வந்தாலும் சரி, 4 சீன்ல வந்தாலும் சரி, அவருக்கென்று தனி முத்திரை உண்டு. அதுபோல் அரசியல் பேசும்போதும் அதில் ஒரு தெளிவு இருக்கும். நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர் கிட்ட கற்றுக் கொள்ள நிறைய இருக்கு. இது மயில்சாமியின் மகன் அன்புக்கு அட்வைஸ் இல்ல. ஆலோசனை’ என்றார்.

Similar News