சினிமா
ஆம்புலன்ஸ், பூஜா சுன்ஜார்

பிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்

Published On 2019-10-23 04:08 GMT   |   Update On 2019-10-23 04:10 GMT
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இளம் நடிகை உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சுன்ஜார். திரைப்பட நடிகையான இவர் சில மராட்டிய படங்களில் நடித்துள்ளார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த பூஜா, தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரது உறவினர்கள் கோரேகானில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிறந்த குழந்தை, ஒருசில நிமிடங்களில் உயிரிழந்தது.



இதையடுத்து பூஜாவின் உடல் நிலையும் மோசமடைந்ததை உணர்ந்த மருத்துவர்கள், அவரை உடனடியாக ஹிங்கோலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹிங்கோலிக்கு செல்ல, அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தேடி அலைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆம்புலன்சின் மூலம் பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பூஜா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News