சினிமா
பிகில் படத்தில் விஜய்

பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய விஜய் ரசிகர்கள்

Published On 2019-10-22 17:13 GMT   |   Update On 2019-10-22 17:13 GMT
பிகில் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் பொருத்தி இருக்கிறார்கள்.
சமீபத்தில் பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவத்தால் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சினிமா பிரபலங்கள் அறிவுறுத்தினர்.

காப்பான் படம் வெளியாகும் போது சூர்யாவின் ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியாகும் போதும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.



தற்போது விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாக இருப்பதால், நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின் பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.
Tags:    

Similar News