சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2019-10-21 16:18 GMT   |   Update On 2019-10-21 16:18 GMT
தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
நடிகைகளில் தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டும் அல்ல தெளிவாக பேச தெரிந்தவர்களும் மிக குறைவே... தற்கால நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த குறையை போக்குகிறார். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மத்த மொழி ஹீரோயின்கள்தாம் தமிழ்ல நடிச்சிக்கிட்டு இருக்காங்க. முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. நாம ஓர் அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களைச் சேரச் சொன்னா அவங்க வருவாங்களா?. இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. 

தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. 

பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில பட்டம் வென்ற அனுக்ரீத்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு க்ரீத்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு க்ரீத்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். 



வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர்ற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலைங்கிற வருத்தம் எனக்குள்ள நிறையவே இருக்கு. நான் எனக்கு நேர்ந்ததை மட்டும் மனசுல வச்சுக்கிட்டுப் பேசலை. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான். 

கதை சார்ந்த படங்களுக்கு நாம யதார்த்தமா இருந்தா போதும். அழகு முக்கியமில்லை. அதுவே கமர்ஷியல் படங்களுக்கு நாம அழகா இருக்கணும். இல்லைனா நம்ம ஊர் மக்கள் மீம்ஸ் போட்டு நம்மளை கலாய்ச்சுத் தள்ளிருவாங்க. அதனால, நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு, ஓர் அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வச்சா எனக்கு சந்தோஷம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி’ என்றார்.
Tags:    

Similar News