சினிமா
சௌந்தரராஜா

மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா

Published On 2019-10-18 14:50 GMT   |   Update On 2019-10-18 14:50 GMT
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் என்று கூறியிருக்கிறார்.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என தன் திறமையால் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் தற்போது விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ள இவர் அடிக்கடி மரம் நடுதல், கண்மாயை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். தற்போது லண்டனில் இருக்கும் அவர், தமிழ் நாட்டில் பெய்து வரும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சந்தோசமா மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம். மழை நீர் தேங்குறனாலதான் டெங்கு கொசு உருவாகுது. வீடுகள், தெருக்கல மழை நீர் தேங்காமல் சுத்தமாக வைப்போம். டெங்கு வராமல் உயிர் காப்போம். வரும் முன் காப்பதே சிறந்தது’ என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News