சினிமா
மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ராதா மோகன் இயக்கும் புதிய படத்திற்கு பொம்மை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள்.
முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘பொம்மை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.