சினிமா
ஐஸ்வர்யா ராய்

ஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

Published On 2019-10-12 10:33 GMT   |   Update On 2019-10-12 10:33 GMT
’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு ஐஸ்வர்யா ராய் குரல் கொடுத்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் ’இருவர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். 



இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சின்ன இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’. இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். 
Tags:    

Similar News