சினிமா
லோகேஷ் கனகராஜ்

கார்த்தி இல்லைனா கைதி இல்ல- லோகேஷ் கனகராஜ்

Published On 2019-10-08 09:18 GMT   |   Update On 2019-10-08 09:18 GMT
கைதி படம் உருவாக கார்த்தி தான் காரணம், கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் டிரீம்வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து  தயாரித்துள்ள படம் “கைதி”. மாநாகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். 

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது: இது எனக்கு இரண்டாவது படம். இந்தப்படம் நடக்க முழு காரணம் எஸ்.ஆர். பிரபு தான். நாயகி இல்லாம, கமர்ஷியல் விஷயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்கனு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். கார்த்தி சார் கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டாரு. 



இப்படிப்பட்ட படம் உருவாக அவர் தான் காரணம். அவர் இல்லைனா இந்தப்படம் இப்படி ஒரு ஆக்‌ஷன் படமா வந்திருக்காது. இந்தப்படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமால் உழைச்சிருக்காங்க. இந்தப்படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும் என்றார்.
Tags:    

Similar News