சினிமா
ரஜினியின் புதிய படம் பிறந்தநாளுக்கு முன்பே தொடக்கம்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அவரது பிறந்தநாளுக்கு முன்பே தொடங்கும் என கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக, சிவாவின் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், ஏ.ஆர்.முருகதாசும் அடுத்ததாக கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். இடையே இயக்குநர் சிவாவோ சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே மீண்டும் ரஜினி நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி.
சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நேற்று முன்தினம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ரஜினி. இதனால் இந்த கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினி கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் போல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது படக்குழு. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.