சினிமா
பூர்ணா

விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை, அதுவும் முக்கியம்தான் - பூர்ணா

Published On 2019-09-18 15:49 GMT   |   Update On 2019-09-18 15:49 GMT
புளூவேல், காப்பான் படத்தில் தற்போது நடித்திருக்கும் நடிகை பூர்ணா, விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. அதுவும் முக்கியம்தான் என்று கூறியிருக்கிறார்.
சவரக்கத்தி படம் மூலம் தனது திறமையை காட்டிய பூர்ணா அடுத்து புளுவேல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி:-

புளூவேல் படம் பற்றி?
இது குறைவான செலவில் எடுக்கப்பட்ட சின்ன படம். ஆனால் ப்ளுவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும். போலீஸ் ஆபிசராக நடித்துள்ளேன். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எமோஷனல் காட்சிகள் தான் அதிகம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக வருகிறேன். 

காப்பான் படத்தில் நடித்த அனுபவம்?
சமுத்திரகனிக்கு ஜோடியாக வருகிறேன். சில காட்சிகள் தான் என்றாலும் திருப்தியான வேடம். என் கதாபாத்திரத்துக்கு நானே குரல் கொடுத்துள்ளேன். பெரிய படங்களில் நடிக்கும் ஆசை இதன் மூலம் நிறைவேறிவிட்டது. அந்த கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

கேரக்டர் ரோல்களில் அதிகம் நடிப்பது ஏன்?
நான் அறிமுகமானதும் தொடக்கத்தில் நடித்ததும் கதாநாயகியாக தான். ஆனால் சமீபகாலமாக ஹீரோயினாக மட்டும்தான் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. பதிலாக நல்ல கதாபாத்திரமாக இருந்தால் அதில் நடிக்க தயங்குவது இல்லை. ஒரு படம் என்றால் எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியம் தான். சில சமயங்களில் ஹீரோயினை விட ஒரு கேரக்டர் நல்ல பெயர் வாங்கி விடும். 



அடுத்து?
கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறேன். தமிழில் வைபவ்வுடன் ஒரு படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறேன். 

விருதுக்காக தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா?
விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. சம்பளமும் முக்கியம்தான். இப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும்போது சில நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனக்கு வாழ்நாள் முழுக்க சினிமாவில் இருக்க ஆசை. ஆனால் எனக்கு அமையும் குடும்ப வாழ்க்கையை பொறுத்தே அது அமையும். காப்பான் படத்துக்காக என்னை அணுகும்போதே எனது நடிப்புக்காக தான் அணுகினார்கள். இதுபோல் பெயர் எடுக்க தான் ஆசை. 

திருமணம்?
அவசியமான ஒன்று. தயாராக இருக்கிறேன். ஆனால் சரியான நேரத்தில் பண்ண வேண்டும். குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள். கடவுள் தான் சரியான நேரத்தை காட்டவேண்டும். சென்னையில் நிச்சயம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். 
Tags:    

Similar News