சினிமா
நடிகை யாஷிகா ஆனந்த்

என்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா? - யாஷிகா ஆனந்த் கோபம்

Published On 2019-09-17 11:46 GMT   |   Update On 2019-09-17 11:46 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை ஆபாச நடிகையுடன் ஒப்பிட்டு பேசியதால மிகவும் கோபமடைந்திருக்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 

அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.



’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என யாஷிகா கூறியுள்ளார்.

Tags:    

Similar News