சினிமா
நடிகை ரம்யா பாண்டியன்

போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்

Published On 2019-09-16 12:00 GMT   |   Update On 2019-09-16 12:00 GMT
ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது எடுத்த போட்டோஷூட்டால் அவருக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளது. 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’`இந்த போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு வரவேற்பு வரும்ன்னு நான் நினைக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பல பேர் மெசேஜ் பண்ணாங்க. சினிமாவில் இருந்தும் பல பேர் போன் பண்ணி, `போட்டோஸ் நல்லா இருந்தது’ன்னு சொன்னாங்க. 



`ஆண் தேவதை’ படத்துக்கு பிறகு சில பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், இந்த போட்டோ ஷூட்டுக்கு அப்பறம்தான் நிறைய நல்ல பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. சில படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கு. படங்கள் மட்டுமில்லாமல் ஒரு வெப் சீரிஸ்லேயும் நடிக்க கேட்டிருக்காங்க. எல்லாமே இப்போ பேச்சுவார்த்தையில் இருக்கிறதால, இதெல்லாம் என்ன கதை, எந்த டீம்னு என்னால சொல்ல முடியாது’. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News