சினிமா
சாய் பல்லவி

தன்னம்பிக்கை தான் அழகு..... அது என்னிடம் நிறைய இருக்கு- சாய் பல்லவி

Published On 2019-09-04 05:48 GMT   |   Update On 2019-09-04 05:48 GMT
மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை தான் என்றும் அது தனக்கு நிறைய இருப்பதாகவும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் என்ற ஒரு படத்திலேயே முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமான சாய்பல்லவி தமிழ், தெலுங்கில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்போது 2 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. அவர் அளித்த பேட்டி வருமாறு:- “மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை. எனக்கு அது நிறைய இருக்கிறது. 

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை எப்படி கொள்ளையடிக்கும் என்றுதான் யோசிப்பேன். படத்தில் நடித்து திரைக்கு வந்த பிறகு வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்று சிந்தித்துக் கொண்டு இருக்க மாட்டேன். படங்களில் நடிக்கும் முன்பு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்று ஆலோசிப்பேன். 



நடிக்க ஆரம்பித்த பிறகு மானசீகமான உறவை கதாபாத்திரங்களோடு ஏற்படுத்தி கொள்வேன். அதுதான் எனது நடிப்பை பிரமாதமாக மாற்றி விடுகிறது. இயக்குனர் கதை சொல்லும்போதே நான் அந்த படத்தில் இருக்கிறேனா? இல்லையா? என்பது புரிந்து விடும். இயக்குனர் சொல்லும் கதை, கதாபாத்திரம் எனக்கு பிடித்து இருந்தால் போதும் உடனே சம்மதித்து விடுவேன். 

மறு கணத்தில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை நேசித்து அவற்றோடு ஒன்றிவிடுவேன். படப்பிடிப்பு முடியும்வரை அந்த கதாபாத்திரத்தோடு பயணம் செய்து கொண்டு இருப்பேன். அதனால்தான் இயல்பாக நடிப்பதாக என்னை பாராட்டுகிறார்கள்.”

இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.
Tags:    

Similar News