சினிமா
கமல்

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 3 பிரபலங்கள்

Published On 2019-09-03 06:53 GMT   |   Update On 2019-09-03 06:53 GMT
நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவரை ரகசிய அறையில் தங்க வைக்க பிக்பாஸ் திட்டமிட்டு இருந்த நிலையில் அதை மறுத்து கஸ்தூரி வெளியேறினார். 

கஸ்தூரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். அல்லது ஒருவரை ரகசிய அறையில் தங்க வைக்கவும் வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா காதல் மட்டுமே பரபரப்பாகி உள்ளது. 



இந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன்வைத்யா ஆகிய மூவரும் விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் மூவரையும் ஒருவார காலத்திற்கு பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கவைக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வருகிறது.  
 
முன்னதாக சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறியிருந்த நிலையில் அதை மறுத்து நடிகை சாக்‌ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனால் சாக்‌ஷி உள்ளே சென்றுள்ளதால் கவின் - சாக்‌ஷி இடையே புதிய பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது. இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 
Tags:    

Similar News