சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ்

தங்கை வேடத்தில் நடித்தது ஏன்? - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Published On 2019-09-02 12:10 GMT   |   Update On 2019-09-02 12:10 GMT
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தது ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கனா படத்தின் வெற்றி மூலம் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது. தனி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த போதிலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக வானம் கொட்டட்டும் படத்திலும் நடித்து வருகிறார். 

இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:- ரொம்ப சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் நடித்தேன். அந்த படம் தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனவே தங்கையாக நடிப்பதற்காக வருத்தப்படவில்லை. 



அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்தால் சரியாகி விடும். சிவாஜி - சாவித்திரி போன்றவர்கள் அப்படி நடிக்கவில்லையா என்ன? சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பதில் எனக்கும் வருத்தம் தான். படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது’. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News